26 September 2013

மாதேவ தேவதாயே!

மாதேவ தேவதாயே!
இன்ப கவிராயர் M.X.ஹென்றி லெயோன் 04.08.1908ல் 
தஸ்நேவிஸ் மாதாவிற்கு பாடிய பதினான்கு சிரீரட்டை ஆசிரிய விருத்தம்

வானூடுலாவு மோரீராறு மீனைநின்
மகுடமெனவே வளைந்து
வையஞ் சிறக்க வொளிர் வெய்யோனை நினது திரு
வளராடையா யுடுத்து
மாசீததார காபதி யெனுந் திங்களை
மலர்ப்பதந் திணை மிதித்து
வானவர் துதிக்குநல லங்கார நாயகீ
மாதேவ தேவதாயே !

சோனைமழை பெய்து வளர்பயிர் செழித்தோங்கவுந்
தொடர் பஞ்சமே யகலவும்
துயர் தருங் கொள்ளை நோய்முற்றுமே யொழியவுந்
துன்பமென்பவை யெவையெனுந்
தொல்லுல கிலுனது மகரெம்மை யணுகாமலே
சுகிர்ததயை யொடு காக்கவும்
தோன்றலர்கள் குலதிலக ஆண்டவணீ வெளிவரத்
துணிபோ டெழுந்தருளும்.

ஆனவோர்பைம் பொன்னினாலமைத் தழகுபெற
அரதனங்களை யழுத்தி
அமரருங் கொண்டாடு முனது மாரதமதை
யலங்காரமாய்ப் புதுப்பித்
தன்னைநீ வரும்வழி யையுஞ் செப்பனிட்டாங்கு
அடர் மரக்கிளைகள் கொய்து
ஆயத்தமாயின் நின்வரவை யெதிர் பார்த்தியா
மனைவருங் காப்பதுண்மை.

தேனைநுகர்வண்டினஞ் செவ்வழிப் பாட்டினைத்
தீங்குரலினா லிசைப்பச்
செங்கமல வாவிதிகழ் திருமந்திர நகரின்மா
சீராலயத் தெழுந்த
செல்வமே பரதர்தஞ் செல்வதஸ் நேவிசாஞ்
செல்வமே மாற்றமில்லாச்
செல்வமே யெம்மைநீ கைவிடா தருள்புரிவை
செல்வ வாரி  தியென்னனையே!

No comments:

Post a Comment