16 November 2009

ராவ் பகதூர் குரூஸ் ஃபர்னாண்டெஸின் 140வது பிறந்த நாள்:

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராவ்பகதூர் குரூஸ் ஃபர்னாண்டெஸின் பிறந்த நாளை (ஞாயிற்றுக்கிழமை நவ. 15) முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் பல்வேறு கட்சியினர் நேற்று மாலை அணிவித்தனர்.
பரதர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் சந்திரசேகரன், பொதுச்செயலர் ஹெர்மன் கில்டு ஆகியோர் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். துணைத் தலைவர்கள் அலாய், அந்தோணி சேவியர், தனம் விக்டோரியா, குரூஸ் பர்னாந்து பேரவை தலைவர் சிக்ஸ்டன், செயலர் ரெனால்டு வி. ராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பரதர் நலச்சங்கம் மற்றும் குரூஸ் பர்னாந்து பேரவையினர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக வந்தனர். தொடர்ந்து குரூஸ் பர்னாந்து பேத்தி ரமோலா, குரூஸ் பர்னாந்து சிலையை பராமரித்து வரும் ஜேனோ என்ஜினீயரிங் நிறுவன உரிமையாளர் ஜேனோ ஆகியோர் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு மேயர் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் தொம்மை ஜேசுவடியான் மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment