Showing posts with label கோரமண்டல் சமூக நற்பணி. Show all posts
Showing posts with label கோரமண்டல் சமூக நற்பணி. Show all posts

09 August 2010

கோரமண்டல் சமூக நற்பணி மன்ற 29வது ஆண்டு விழா


தூத்துக்குடி கோரமண்டல் சமூக நற்பணி மன்ற 29வது ஆண்டு விழா ஞாயிறு (08.08.2010) காலை 10 மணிக்கு ராஜம் மஹாலில் நடந்தது.சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் உபால்டு மஸ்கிரனாஸ் தலைமை வகித்தார். சென்னை விஜயா மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி ஃபர்னான்டஸ் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ டிரோஸ் ஆசியுரை வழங்கினார். அகில இந்திய பரவர் கூட்டமைப்பு தலைவர் அல்பர்ட் ராயன், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தூத்துக்குடி கோரமண்டல் சமூக நற்பணி மன்ற நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கின‌ர்.

ஏற்பாடுகளை கோரமண்டல் சமூக நற்பணி மன்ற தலைவர் நெவில் கற்றார், பொதுச்செயலாளர் பிரின்ஸ்டன் பர்னாந்து, பொருளாளர் குணபாலன் பர்னாந்து, செயற்குழு உறுப்பினர் தர்மன் டிரோஸ், செயற்குழு உறுப்பினர் சகாயராஜ் ரொட்ரிக்ஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.